சென்னை

வரும் 26 ஆம் தேதி அன்று சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் வரும் 26 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்தக் கூட்டத்தில் திமுக  இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  நேற்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ,

”தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-ம் தேதி காலை 10.30 மணியளவில் தி.நகரில் உள்ள அகார்ட் ஓட்டலில் நடைபெறும்.

அப்போது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. இளைஞரணி 2- ஆவது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.