துரை

ன்று காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும்.  குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கமான ஒன்றாகும்.

நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இன்று காலை 7 மணிக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். போட்டி இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இத போட்டியில் சிறப்பாகக் களம் காணும் வீரருக்கும், வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.