சென்னை: புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வந்தடைந்தது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு இன்று மேலும் சென்னை வந்துள்ள 3.10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. இவை, மாநில சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தடுப்பூசிகள் பிரித்து மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை (18ந்தேதி மாலை வரை) 33 லட்சம் (33,00,085) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.