விழுப்புரம்

ன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது.  கடந்த 8 ஆம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.  இதைக் காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும். தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் பழனி இன்று அரசு தேர்வுகள், முக்கியமான அலுவல் பணிகள் குறைவான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.