தூத்துக்குடி

கன மழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் அதி கனமழை பெய்தது. ,

இந்த கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளம் தற்போது வடிந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளவில்லை.

எனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் துறை தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.