சென்னை

ன்று கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளிக்கிறார்;

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து, கடந்த 1 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள்.

மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமானோர் நேற்று விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வடசென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் தன் விருப்ப மனுவை சமர்ப்பித்தார். நேற்றைய தினம் ஏராளமானோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.

இன்று தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விருப்ப மனு அளிக்க உள்ளார்.

ஏற்கனவே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.