மதுரை

இன்று கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் கோவில் மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே இந்த கோவிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுர திருப்பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று 2 ஆம் நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகம் இன்று காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா நடைபெறுகிறது.  யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனித நீர் ஊற்றப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. மேலும் பல வண்ண பூக்களை ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களிலும், பக்தர்கள் மீதும் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்கள் அன்னதானம் சாப்பிடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த விழாவையொட்டி கள்ளழகர் கோவில், ராஜகோபுரம், 18-ம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் வளாகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.