சென்னை: முதல்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வான மாணவர்கள் மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். இதையடுத்து இரண்டாவது கட்ட கவுன்சிலிங் ஒருசில நாட்களில் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதல்கட்ட மருத்துவமனை கவுன்சிலிங் ஆன்லைனில் நடைபெற்றது. இதில், 5647 எம்பிபிஎஸ் இடங்களும், 1389 பிடிஎஸ் இடங்களும்  ஒதுக்கப்பட்டன. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. ம மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் கடந்த 30ம் தேதி முதல் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்கள்  கல்லூரிகளில் சேருவதற்கு இன்று கடைசி நாள் கொடுக்கப்பட்டது. எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியை அதிக மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர். இதையடுத்து 58 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் மற்றும் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் சேகரிக்க இருக்கிறது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் சேகரிக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.