ந்தியா உள்பட பல்வேறு நாடுகளை ஆட்கொண்ட சுனானி பேரழிவு தினம் இன்று. 2024ம் ஆண்டு அதிகாலையில் உருவான ஆழிப்பேரலையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஆட்கொள்ளப்பட்டனர். அந்த இழப்பு இன்றுவரை மாறாத வடுவாகவே தொடர்கிறது. இன்று சுனாமி பேரழிவின் 19வது நினைவு தினம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள், பல நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டுடிசம்பர் 26ந்தேதி காலை, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளின் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமி. சுனாமியும் அதன் பின்விளைவுகளும் இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் பெரும் அழிவு மற்றும் இழப்புகளுக்கு காரணமாக இருந்தன . டிசம்பர் 26, 2004 அன்று, உள்ளூர் நேரப்படி காலை 7:59 மணிக்கு , இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது .

அடுத்த ஏழு மணி நேரத்தில், ஒரு சுனாமி —அபரிமிதமான கடல் அலைகளின் தொடர்—இந்த நிலநடுக்கத்தால் தூண்டப்பட்டு, இந்தியப் பெருங்கடலை அடைந்து , கிழக்கு ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை நாசமாக்கியது . சில இடங்களில் அலைகள் கரையோரத்தைத் தாக்கியபோது 30 அடி (9 மீட்டர்) அல்லது அதற்கும் அதிகமான உயரத்தை எட்டியதாகத் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா , இலங்கை , இந்தியா , மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய சேதத்தை ஏற்படுத்திய சுனாமி , ஒரு டஜன் நாடுகளில் குறைந்தது 2, 25,000 பேரைக் கொன்றது, பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த தமிழக கடற்கரை கிராம மக்கள் இப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் அதிகாலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள்சீறி எழுந்தன. சென்னை, புதுச்சேரி,கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பல ஆயிரம் பேர் கடல்அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்தோனேசிய அதிகாரிகள், குறிப்பாக வடக்கு சுமத்ராவின் ஆச்சே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியதாக மதிப்பிட்டுள்ளனர் . இலங்கை மற்றும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் . தாழ்வான தீவு நாடான மாலத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் விடுமுறைக்கு சென்ற பல ஆயிரம் ஆசியரல்லாத சுற்றுலாப் பயணிகளும் இறந்துவிட்டதாக அல்லது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பற்றாக்குறை – நிவாரணப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் மகத்தான பணியுடன் இணைந்து சாலைகள் அழிக்கப்பட்ட அல்லது உள்நாட்டுப் போர் மூண்ட சில தொலைதூரப் பகுதிகளுக்கு பொருட்களைப் பெற முயல்கிறது – உயிரிழந்தவர்களின் பட்டியலை நீட்டித்தது. கிராமங்கள், சுற்றுலாத் தலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடித் தளங்கள் இடிக்கப்பட்டது அல்லது குப்பைகள், உடல்கள் மற்றும் தாவரங்களைக் கொல்லும் உப்பு நீரால் மூழ்கடிக்கப்பட்டதால் , நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பும் கடுமையாக இருந்தது . இந்த பேரழிவு ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று 19வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, சென்னை உள்பட  தமிழ்நாட்டின் உள்ள கடற்கரை கிராமங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் நிகழ்வுகள்  நடைபெறுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் சுனாமியால் 1,017 பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி 19 ஆண்டுகளைக் கடந்த பின்பும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகம் ஒருபுறமிருக்க, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமடையாத நிலையிலேயே இன்றும் அவர்கள் உள்ளனர். இயற்கை சீற்றங்களில் இருந்துமீனவர்களை காக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கன்னியாகுமரி யில் ஹெலிகாப்டர் மீட்பு மையம்அமைக்க வேண்டும் என அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமங்களில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

நாகை மாவட்டம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில், இன்று சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.. நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை (அரசு கணக்கெடுப்பின்படி) 6,065 பேர். இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231 பேர். மற்றவர்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்கள் நினைவாக  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  இன்று (டிச.26) காலை 9 மணியளவில், 19-வது ஆண்டு சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் மற்றும்அனைத்துத் துறை அலுவலர்கள், சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா தங்கும் விடுதிமாணவிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னையிலும் கடற்கரை கிராம மக்கள் கடலில் பாலை ஊற்றி தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பல இடங்களில் சுனாமி நினைவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.