சென்னை

ன்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது.  இந்த உயர்வு முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.  திங்கள் அன்று அ.தி.மு.க.வினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்குச் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும்.