டில்லி

ன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாகக் கூடுகிறது.

தமிழகத்தில் தன்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் காவிரி நீரை உரிமையோடு கேட்டு தமிழகம் போராடி வருகிறது. கர்நாடக அரசு அணைகளில் நீர் இருப்பு இல்லை எனக்கூறி தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது.

நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 16-ந்தேதி காலை 8 மணி முதல் 31-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழகத்துக்குத்  திறந்து விட வேண்டும் எனக் கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாகத்தான் வைக்கும். அதே வேளையில் இந்த பரிந்துரையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் அந்த விஷயத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை எனக் கர்நாடகா தொடர்ந்து தெரிவித்து வருவதால் கடந்த சில கூட்டங்களில் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாகக் கூடி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறது. நேற்று முன்தினமும் ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையைக் கர்நாடகா  செயல்படுத்தத் தயக்கம் காட்டி இருப்பதாக தெரிகிறது.

எனவேகாவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாகக் கூட்ட, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று முடிவு எடுத்து அறிவித்தார்.  இன்று மேலாண்மை ஆணைய கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு டில்லியில் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

குழுவின் இந்த 26-வது கூட்டத்தில், தமிழகத்துக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.  ஆணையம் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடுமா? அல்லது தமிழ்நாட்டின் வலியுறுத்தலை ஏற்றுக் கூடுதல் தண்ணீரைத் திறக்க உத்தரவிடுமா? என்கிற எதிர்பார்ப்புடன் கூட்டம்  நடைபெற உள்ளது.