தராபாத்

ன்று பாஜக தெலுங்கானாவில் 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர் 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்., சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

இம்முறை தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்குத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்று பாஜக  52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பொத் சட்டமன்றத் தொகுதியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சோயம் பாபு ராவ் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அரவிந்த் தர்மபுரி, கோர்டலா தொகுதியிலும், பண்டி சஞ்சய் குமார் கரீம்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.