சென்னை

ன்றும் நாளையும் சென்னையில் சில புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

“பராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.10, 10.56 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில்கள் காட்டாங்கொளத்தூர் – செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் 1ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து காலை 11.30, 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு – காட்டாங்கொளத்தூர் இடையே இன்று மற்றும் 1ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.50, 12.20 மணிக்கு புறப்படும்.

திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று மற்றும் 1ம் தேதி ரத்து ெசய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இன்று மற்றும் 1ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.