சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 935 பேரும் கோவையில் 1,895 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 14,016 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,53,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 29,547 பேர் உயிர் இழந்து 21,74,247 பேர் குணம் அடைந்து தற்போது 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,25,009 பேர் பாதிக்கப்பட்டு 7,826 பேர் உயிர் இழந்து 5,08,043 பேர் குணம் அடைந்து தற்போது 9,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,895 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.  இரண்டாம் இடத்தில் 1323 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,03,540 பேர் பாதிக்கப்பட்டு 1,735 பேர் உயிர் இழந்து 1,84,811 பேர் குணம் அடைந்து தற்போது 17,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,51,228 பேர் பாதிக்கப்பட்டு 2,221 பேர் உயிர் இழந்து 1,44,811 பேர் குணம் அடைந்து தற்போது 4,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.