சென்னை

மிழகத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,32,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,02,043 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,51,89,430 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் மேற்கு வங்கத்தில் இருந்து இருவர் வந்துள்ளனர்.   இதுவரை 27,33,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,575 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 746 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,88,888 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,59,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,623 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 91 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 112 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,280 பேர் பாதிக்கப்பட்டு 2,480 பேர் உயிர் இழந்து 2,47,565 பேர் குணம் அடைந்து தற்போது 1,235 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,310 பேர் பாதிக்கப்பட்டு 2,538 பேர் உயிர் இழந்து 1,71,162 பேர் குணம் அடைந்து தற்போது 610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.