டில்லி

ந்தியாவில் நேற்று 12,89,983 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,419 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,66,241 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 159 அதிகரித்து மொத்தம் 4,74,411 பேர் உயிர் இழந்துள்ளனர்.   24 மணி நேரத்தில் 8,251 பேர் குணமடைந்து இதுவரை 3,40,97,388 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 94,742 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தும் கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,89,983 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 65,19,50,127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,01,766 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 5,50,87,387 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.