பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 357 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 517 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,82,089 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,916 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 438 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,34,523 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,621 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,58,582 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை 14,276 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 826 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,37,691 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.