டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 326, மகாராஷ்டிராவில் 3018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,25,066 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 49,373 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,572 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,20,021 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 49,373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,81,599 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,100 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 364 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,71,116 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,383 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.