சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 957 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,16,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,092 .பேர் உயிர் இழந்து 7,95,293 பேர் குணம் அடைந்து தற்போது 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,24,958 பேர் பாதிக்கப்பட்டு 3,997 பேர் உயிர் இழந்து 2,18,250 பேர் குணம் அடைந்து தற்போது 2,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,155 பேர் பாதிக்கப்பட்டு 648 பேர் உயிர் இழந்து 50673 பேர் குணம் அடைந்து தற்போது 834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,900 பேர் பாதிக்கப்பட்டு 743 பேர் உயிர் இழந்து 48,548 பேர் குணம் அடைந்து தற்போது 609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.