சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில்  இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
bty

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் அதிகரித்து வருவது சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில்  1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1046 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,15,444 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் 11,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,434 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.