சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,105-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,641-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,72,251- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 54,213- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,944 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 874 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 747 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,87,046-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

சென்னை-1,179 திருவள்ளூர்-422 செங்கல்பட்டு-376 கடலூர்-340 கோவை-290 ராணிப்பேட்டை-260 தேனி-213 சேலம்-200 காஞ்சிபுரம்-184 குமரி-182 புதுக்கோட்டை-170 நெல்லை-169 விருதுநகர்-167 வேலூர்-153 திண்டுக்கல்-118 திருச்சி-117 தஞ்சை-109, தி.மலை-100 மதுரை-90 தென்காசி-87 விழுப்புரம்-84 நாகை-81 க.குறிச்சி-81 தூத்துக்குடி-77 அரியலூர் -73 திருப்பத்தூர்-70 திருப்பூர்-68 ராமநாதபுரம்- 59 கிருஷ்ணகிரி-56 திருவாரூர்- 54 சிவகங்கை-49 கரூர்-40 நாமக்கல்-34 நீலகிரி – 32 பெரம்பலூர்-26 தர்மபுரி -18 ஈரோடு-14