காஞ்சிபுரம்

ன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானதாகும்.  அங்குள்ள புகழ் பெற்ற கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.  எனவே காஞ்சிபுரம் நகரில்  ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்,

”இன்று காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட  வாய்ப்புள்ளது.

எனவே இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில்  1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம், 4.அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி,9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள் அமைந்துள்ளன.

இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம்.   மேலும் இவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது”.

என்று கூறப்பட்டுள்ளது.