சென்னை:

குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 2வது கட்ட கலந்தாய்வு வரும் 25-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் அறிவித்து உள்ளது.

அரசு வேலைகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் துறையான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ தேர்வு கடந்த ஆண்டு  ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்றோருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3 வரை யில் நடந்தது.

முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் மீதமுள்ள 88 காலியிடங்களை நிரப்புவதற்கான 2வது கட்டக் கலந்தாய்வு வரும் 25 ம் தேதி நடத்த இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதாவது,

கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும்,  கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்க ளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.

மேலும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்,   அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்,  கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும்  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.