சென்னை
மிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.   குறிப்பாக தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவ்ச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம் எனவும் இதனால் விவசாயம் கடுமையாக  பாதிப்படையும் எனவும் தொட்ர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.    இது குறித்து தமிழக முதல்வ்ர் எடப்பாடி பழனிச்சாமி மத்டிய ம்ந்துரை அமைச்சர் ஆர் கே சிங் குக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர், “தமிழகத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியுடன் கூடிய மின் உற்பத்தி வசதி மற்றும் அதற்கான இணைப்பு வசதிகள் 49.47 சதவீதம் உள்ளது. தற்போது மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011 முதல் 15,410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்க மத்திய அரசின் ஆதரவு தேவையாக உள்ளது.
தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் கொள்கை முடிவு விவசாயத்துறைக்கு பொருந்தாது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு இதற்கான மானியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
மத்திய அரசு தனியார் ஏஜென்சிகள், துணை லைசென்ஸ் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தத்தினால் கிராமப்புறங்களுக்கு மின் பகிர்வு செய்யும் அரசு நிறுவனங்கள் மிகுந்த வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். அத்துடன் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
ஹைட்ரோ பவர் என்னும் பருவகாலத்தை சார்ந்துள்ள மின்சக்தி உற்பத்தி முறை மின் பகிர்வு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வராது. அத்துடன், சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய மின் உற்பத்தி என தனித்தனியாக மின் கொள்முதலை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக மொத்தமாக புதுப்பிக்க கூடிய மின் சக்தி கொள்முதல் என நிர்ணயிக்க வேண்டும்.
விவசாயத்துக்கு சூரிய மின்சக்தி உற்பத்திக்கான வசதிகளை 100 சதவீத மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்து தரப்பட வேண்டும். இதற்கான செலவுகளை விவசாயிகளின் மேல் சுமத்தக்கூடாது. மின் பகிர்மான நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி ஒதுக்கி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களின் பாக்கி தொகைகளை சரி செய்யும் திட்டத்தை தமிழக அரசு வரவேற்கும்.
மின் நிதி கழகம் மற்றும் ஊரக மின் வசதி கழகத்திற்காக தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.20,622 கோடி கேட்டு ஏற்கனவே மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ள நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும். தற்போது மறு கட்டமைப்பு விரைவான மின் மேம்பாடு மற்றும் சீர்திருத்த திட்டத்தின் கீழ் ரூ.2661.85 கோடி மதிப்பிலான பணிகள் தமிழகத்தில் 88 நகரங்களில் முடிவடைந்துள்ளது.
ஆகவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்தியஸ்த தீர்வு தொகை ரூ.268.86 கோடியை வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் பகுதி 2ன் கீழ் 50 சதவீத கடன் தொகையான ரூ.1330.93 கோடியை நிதி உதவியாக வழங்க வேண்டும்.
தினமும் தமிழகத்திற்கு மின் உற்பத்திக்காக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை.  அதாவது எரிபொருள் ஆண்டுக்கு 21.291 மில்லியன் டன் தரப்பட வேண்டும். இருப்பினும் ஒப்பந்தத்திற்கு மாறாக கடந்த 5 ஆண்டுகளாக எரிபொருள் சப்ளை ஒப்பந்தத்தில் 61.6 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. வனப்பகுதிகள் தொடர்பான தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் ஒடிசா மாநிலத்தின் சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி வருவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய அனுமதியை வழங்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கார்-புகழூர்-திருச்சூர் உயர் அழுத்த மின் தடத்திற்கு தேசிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தமிழகமின் வளர்ச்சி ஆணையத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.50.88 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.