சென்னை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் யுவன் இசையமைத்த பாடலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார். பலருக்கு யுவன் பாடல்கள் ஒரு போதை மருந்து என்று சொல்லுமளவுக்கு அவரது பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் உள்ளது.

ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்திய அரசின் சார்பாக “இந்துஸ்தானி வே” என்ற பாடலை வெளியிட்டார்.  தற்போது, தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘வென்று வா வீரர்களே’ இந்த பாடலுக்கு யுவன் பாடி இசையமைத்துள்ளார்.

யுவன் இசையமைத்த இந்தப் பாடல் தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஒலிம்பிக் வீரர்கள், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.