சென்னை

மிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். 

”நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடைக்கால வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு, இதய பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். 

உடலில் அதிக வெப்பநிலை உண்டாகி மயக்கம் ஏற்பட்டவர்கள் மற்றும் இதனால் குழப்பமான மனநிலையில் இருப்பவர்களின் ஆடையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம்.  மேலும், 108, 104 எண்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜுஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடிப்பது நல்லது  தவிரப் பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். 

பொதுவாக நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்..  மக்கள் வெளியே செல்லும்போது தவறாமல் காலணிகளை அணிவதுடன், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையைக் கொண்டு செல்ல வேண்டும். 

குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் வேளையில் வீட்டின் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலைத் தவிர்க்க வேண்டும்” 

என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.