சென்னை

ட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வின் முடிவில் தமிழக சுகாதாரத்து|றை அமைச்சர், செயலர், மருத்த்டுவ பணிகள் இயக்குனர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ஊட்டச்சத்து மாவு குறித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து விரிவான பதில் அளிக்கபட்டது.

அந்த பதிலில்,

”கடந்த 2018 இல்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் கர்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம்  தொடங்கப்பட்டு 18 ஆயிரம் ரூபாய் கர்பிணிகளுக்கு தரப்பட்டது. ஆனால் அந்த நிதி முழுமையாக அவர்களின் உடல் நலம் சார்ந்து பயனடுத்துவதில்லை என்பதால், அரசே அவர்களுக்கு 10% தொகைக்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறது.

ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைகள் படி, கர்பிணிகளுக்கு பேறு காலத்தில் என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என தீர்மானின்கப்படுகிறது. அதனடிப்படையில் டெண்டர் விடப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் கர்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது.  சந்தை விலை ரூ.588 ஆக இருக்க அதை. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதை ரூ.460.50 க்கு வாங்கியது. இதன் மூலம் 127.50 ரூபாய் சந்தை விலையிலிருந்து குறைவாக வாங்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் முடிந்ததன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி மீண்டும் டெண்டர் திறக்கப்பட்டது. இதற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை. மாநில திட்ட ஆணையம் டெண்டர் திறக்கப்பட்ட பிறகு , இந்த சத்துமாவை ஆவினிடமிருந்து பெறலாமே என கருத்து தெரிவித்தது.  இது குறித்து விவாதித்து முடிவு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆவின் நிர்வாக இயக்குநர் இருந்தனர். கர்பிணி பெண்களுக்கு தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையான சத்து மாவு இருந்தால் அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து அந்த அறிக்கையை தருமாறு ஆவினிடம் கூறப்பட்டுள்ளது.

ஆவினில் தற்போது இருக்கும் பால் பவுடர் டீ காபி போட தான் பயன்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாரிடமிருந்து என்ன விலையில் வாங்க போகிறோம் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் தொழில்நுட்ப குழு முடிவு செய்யவில்லை. விலை குறைவாக உள்ளது என்பதற்காக ஆவினில் வாங்க முடியாது எனவும், ஆப்பிளையும் – எலுமிச்சையையும் ஒப்பிடுவது போன்ற குற்றச்சாட்டாக உள்ளது”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.