சென்னை: மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ள உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் அருகே நடக்கும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.brihade hotel ventures நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இரண்டு நாள்  சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!