சென்னை:

ன்று காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் பன்வாரிலால் புரோஹித் புதிய தமிழக கவர்னராக பொறுப்பேற்கிறார்

தற்போது தமிழகத்தில் அரசியல் நிலை மிகவும் குழப்பமாக இருப்பது தெரிந்ததே. வித்யாசாகர் ராவ், மகராஷ்டிரா மாநிலத்துடன் தமிழ்நாடு மாநிலத்திலும் கவர்னராக பொறுப்பு வகித்தார்.  அதிமுகவில் ஒரு அணியினரான 18 எம் எல் ஏக்கள் முதல் அமைச்சர் பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.  இதனால் அதிமுக பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறி சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வற்புறித்தி வந்தன.
கவர்னரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், தனபால் தகுதி நீக்கம் செய்தார்.  நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதை தொடர்ந்து இந்த சிக்கல்களைக் களைய தமிழகத்திற்கு முழு நேர கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து, வித்யாசாகர் ராவ் விலகினார்.

தமிழக அரசு சார்பில், வித்யாசாகருக்கு பிரிவுபசார விழா நேற்று நடத்தப்பட்டது.  அதன் பின் காலை, 9:30 மணிக்கு, அவர், தன் மனைவி வினோதாவுடன், தனி விமானத்தில், மும்பை சென்றார்.    அவர்களை முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள், வழியனுப்பி வைத்தனர்.

 

அதன் பின் நேற்று பகல், 1:30 மணிக்கு, பயணியர் விமானத்தில், புதிய கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பெங்களூரிலிருந்து சென்னை வந்தார்.  அவருக்கு முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., – டி.கே.ராஜேந்திரன் ஆகியோர், பூங்கொத்து கொடுத்து, வரவேற்றனர். காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையையும் நடை பெற்றது.   அதன் பின் புரோஹித், ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார்.

ராஜ்பவனில் இன்று காலை, 9:30 மணிக்கு, புதிய கவர்னர்க்கு பதவியேற்பு விழா நடைபெற்றது  அவருக்கு  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.