சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் பயணமாக டில்லிக்குச் சென்றுள்ளார்.

திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. அண்மையில் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘எனக்கு அதிகாரம் இருந்தால் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என்று கூறினார்.

ஆளுநரின் இந்த கருத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7 மணியளவில் திடீரென டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டில்லியில் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்று தங்கியுள்ள அவர், முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது..டில்லியிலிருந்து நாளை மாலை  ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.