மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி.

இவர் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி to மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கி வந்தார்.

30 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றிய முத்துப்பாண்டி 60 வயது நிரம்பிய நிலையில் இன்று காலை பணி ஓய்வு பெற்றார்.

இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை இன்று காலை கடைசியாக இயக்கிய அவர் அதனை வணங்கி முத்தமிட்டு அரசுப் பேருந்தை கட்டித் தழுவினார்.

கண்ணீர் ததும்ப அரசுப் பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.