சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 5ந்தேதி அன்று விடுமுறை நாளாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை 4ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் வகையில் 3ந்தேதியும், 5ந்தேதியும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 5ந்தேதி  வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவித்து உள்ளது. இந்த தினத்திற்கான விடுமுறையை நவம்பர் 20ந்தேதி அன்று ஈடு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தமிழகஅரசின் தாராளம் காரணமாக அரசு ஊழியர்கள், 4ந்தேதி தீபாவளி அன்று முதல்  4 நாட்கள் தொடர் விடுமுறையை பெறுகிறார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.