சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக சென்னைக்கு அடுத்து பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இன்று மட்டும் 1285 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்து அதிகபட்சமாக கோவையில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கோவையை தொடர்ந்து சேலத்தில் 432 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடலூரில் 420, செங்கல்பட்டு 306, திருவள்ளூர் 284 பேர், காஞ்சிபுரம் 241 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. வேலூரில் 178, விழுப்புரத்தில் 171, கன்னியாகுமரி 161, ஈரோடு 156, நெல்லை 154, திருவண்ணாமலை 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.