சென்னை

ன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒமிக்ரான் பரவல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு இட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்திலும் பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 118 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த பரவலைத் தடுக்க இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.  இந்த கூட்டத்தில் அவர் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.