சென்னை

நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி முகக் கவசம் அணியாதோரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது.  தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.  ஆயினும் ஒரு சிலர் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர்.   அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அவ்வகையில் சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முகக் கவடம் அணியாமல் சுற்றித் திரிந்த 1022 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.  இவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.2,18,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.