கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம். வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார் ஸ்டாலின்.

இதனையடுத்து வைக்கத்தில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் துணைவியார் ஜானகி அம்மாள் அவர்களின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாள் ஆகியோரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் வைக்கம் போராட்டம் அந்த மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் : மு. க. ஸ்டாலின்