லாஸ் ஏஞ்சல்ஸ்:

மிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் அமெரிக்கா வின்  லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வை யிட்டார்.

லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள எடப்பாடி நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றடைந்தார். அங்கு  அமெரிக்க வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்குள்ள அனாஹெய்ம் (anaheim) என்ற இடத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் நிலையத்தை பார்வையிட்டார். அப்போது வீடுகளில் இருந்து கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்தமாக்கி மீண்டும் அதனை பயன்படுத்தும் முறை மற்றும் தொழில்நுட்பம் குறித்து, அந்த அந்த நிலையத்தின் அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கி கூறினார்கள்.

இந்த பயணத்தின்போது எடப்பாடியுடன்,  அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் உள்பட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த மையத்தில் ஒரு நிமிடத்தில் 4 ஆயிரம் கேலன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.