சென்னை: மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் .சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  இருக்கும் போது, மீண்டும் அது நீட்டிக்கப்படுமா என்பது பின்னர் தெரியவரும். ஆனால், தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவ குழு ஆலோசனைக்கு பிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன்  இன்று காலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.