சென்னை

மிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வுகள், பணி நியமனம்  ஆகியவற்றில் சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு போன்றவை வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் சரிவரப் பின்பற்றுவதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.  எனவே இது குறித்துக் கண்காணிக்கக் குழு ஒன்றை அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் போன்றோர் இடம் பெறுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   இக்குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனத்தில் சமூக நீதி அளவுகோலைக் கண்காணிக்க உள்ளது.