கோவை: கொரோனா தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள், பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

கொரோனாவின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் இருக்கிறது.

முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை  குறைக்கலாம். வரக்கூடிய 20 நாள்கள் சவாலானதாக இருக்கும், தொற்று குறைந்தால் லாக்டவுனில் மேலும் தளர்வுகள் தரப்படும்.

மாநகர பகுதிகளில் கொரோனா குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களில் தொடர்ந்து பாதிப்பு இருக்கிறது. நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றார்.