சென்னை

மிழக தலைமைச் செயலர் வானிலை மையத்தைக் குறை கூறி உள்ளார்.

இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது அவர்.

”*தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது.

*தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

*9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

*விமானப்படை, கடற்படை மூலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும்.

*பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து கூறவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருந்திருக்கும்.

*தென் மாவட்ட பெருமழை பாதிப்பு காரணமாக 10 பேர் பலியாகியுள்ளனர்.” 

என்று தெரிவித்துள்ளார்.