சென்னை: ஆளுநர், முதலமைச்சருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: சந்திப்பின் போது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தினார் என்று தெரிவித்தார்.