சென்னை

நிநிதிலை அறிக்கைக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த மாதம் 18 ஆம் தேதி அன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதையொட்டி  தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் மார்ச் 18 அன்று தொடங்க உள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”தமிழக சட்டப்பேரவையில் அடுத்த கூட்டத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை10.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.

மேலும் அன்று காலை 10.30 மணிக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.