சென்னை:

மிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் சென்னையில் இன்று காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவலில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகருமான மறைந்த ஜி.கருப்பையா மூப்பனார் என்ற ஜி.கே.மூப்பானரின் மனைவி கஸ்தூரி அம்மாள். இவர் தனது மகன் ஜி.கே.வாசனின் சென்னை  வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக இன்று அவர்  காலமானார்.

அவரது மறைவு கேட்டதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.