சென்னை

மாகா தலைவர் ஜி கே வாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமையில் உள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கடும் வேகம் எடுத்தது.   தற்போது அது குறைந்து வருகின்றது.   நேற்று தமிழகத்தில் 16,906 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 35 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 25,592 பேர் குணம் அடைந்து தற்போது 1,88,599 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இந்த கொரோனா தொற்று சாமானியர்கள், அரசியல் தல்வர்கள், திரை மற்றும் விளையாட்டு பிரபலக்கள் என பலரையும் பாதித்துள்ளது.   இதில் ஒருவராகத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி கே வாசனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜிகே வாசன் நேற்று, “

எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் வரை நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்”

என்று அறிவித்துள்ளார்.