சென்னை

மிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,61,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,30,651 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,18,85,324 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 3 பேர் வெளிநாட்டுகளில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 33,61,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,599 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,592 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,35,118 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,88,599 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 2,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,34,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 18 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,960 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5,127 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,93,929 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 31,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 1,807 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,308 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,16,586 பேர் பாதிக்கப்பட்டு 2,571 பேர் உயிர் இழந்து 2,90,467 பேர் குணம் அடைந்து தற்போது 23,548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,27,016 பேர் பாதிக்கப்பட்டு 2,625 பேர் உயிர் இழந்து 2,11,722 பேர் குணம் அடைந்து தற்போது 12,669 பேர் சிகிச்சையில் உள்ளனர்.