திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன குழாய்களில் அவ்வப்போது உடைந்து எண்ணை கசிவு ஏற்பட்டு விவசாயம் மற்றும் நிலத்தடி குடிநீர் பாதிப்பதை கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் பூமிக்கடியில் தனசேகரன் என்பவரது வயலில் குழாய் உடைந்து எண்ணை கசிந்தது. தகவலறிந்த மக்கள் அச்சத்துடன் எண்ணை கசிவு நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆவேசமடைந்தனர்.

இதையடுத்து குளிக்கரை, கமலாபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.