திருப்பூர்:

 கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுவதாக  பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த உள்ளது

இந்த நிலையில் சென்னை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பேருந்து போக்குவரத்து சேவை , ரயில் போக்குவரத்து சேவை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படுவதாக, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.