சென்னை

ருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியதாக பாஜகவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

“கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை என்ற பெயரில் கருப்புப் பணத்தை எல்லாம் வெள்ளைப் பணமாக வசூலித்து வைத்திருப்பது பா.ஜ.க.மட்டுமே ஆகும். பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலித்த தொகையே 6 ஆயிரம் கோடிக்கு மேல் என்றால் தேர்தல் பத்திரம் அல்லாமல் கருப்புப் பணமாக எவ்வளவு வசூலித்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

ஏன் தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலில் அதானி, அம்பானியின் நிறுவனங்கள் இடம்பெறவில்லை? அதானியும் அம்பானியும் தேர்தல் நன்கொடை தரக்கூடிய அளவுக்குப் பணக்காரர்கள் இல்லையா?  அவர்கள் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன.மக்கள் இது பா.ஜ.க.வின் சூதாட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.”

என்று தெரிவித்தார்.