சென்னை
நாளை சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”திருவனந்தபுரம் கோட்டத்தில் காயங்குளம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்: 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு வழியில் வசதியான இடத்தில் 45 நிமிட நேரம் நிறுத்தப்படும்.
வண்டி எண்: 16187 காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மே 24ந்தேதி காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழியில் வசதியான இடத்தில் 45 நிமிடம் நிறுத்தப்படும்.
வண்டி எண்: 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும்.”
என அறிவிக்கப்பட்டுள்ளது.